இப்படி ஒரு மாதம் கழிச்சி ஒட்டு எண்ணுவதால், என்ன லாபம் அப்படின்னு மட்டும் இங்கே பார்ப்போம்.
1 .மாற்றுக் கட்சி தொண்டர்கள் மேலுள்ள அர்த்தமற்ற பகைமை மறந்து/மறைந்து போகும். அதனால், சண்டை சச்சரவு குறையும்.
2 . ஒரு மாதக் காலமும் 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம்' என்று அனைத்துக் கட்சி தலைவர்களும்,
தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம்.
3 . 'வெற்றிப் பெற்றால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது. தோல்வியடைந்தால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது' என்று
இந்த கால அவகாசத்தில் சிந்தித்து, இரண்டுக்குமே அறிக்கை தயார் செய்து வைத்து விடலாம். இதிலும், ஒரு சிக்கல் இருக்கிறது,
வெற்றிப் பெற்ற சந்தோஷத்திலோ, தோல்வியடைந்த வருத்தத்திலோ அறிக்கையை மாற்றி வெளியிடும் அபாயம் உள்ளது.
4 . கருத்துக் கணிப்பு வெளியிட்ட பத்திரிக்கைகளும், பதிவர்களும் இந்தக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கும் மேலே
உள்ள மூன்றாவது 'பாரா' பொருந்தும்.
5 . முடிவு தெரிவதற்குள் தலைவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளிநாட்டுக்கு சென்று வரலாம்!
6 . எந்தக் கவலையும் இல்லாமல் ஐ.பி.எல். பார்க்கலாம்!
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.